தாமிரபரணி பாட்டுக்கு பாஜக எதிர்ப்பு
சென்னை:தாமிரபரணி படத்தில் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய புகழ் பெற்ற கற்பூர நாயகியே கனகவல்லி பாடலைரீமிக்ஸ் செய்து டூயட் பாடலாக போட்டுள்ளதற்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன்கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலக் குத்துப் பாட்க்களை பாடிப் புகழ் பெற்றவர் எல்.ஆர்.ஈஸ்வரி. கலகல குரல் வளம் கொண்டஎல்.ஆர்.ஈஸ்வரி, அம்மன் பாடல்களைப் பாடுவதிலும் பிரபலமானவர். அவரது அம்மன் பாட்டுக்கள் இன்றும்கூட நம்ம ஊர் கோவில்களில் படு விசேஷமாக இடம் பெறுகிறது.ஈஸ்வரி பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல் கற்பூர நாயகியே கனகவல்லி, மாரி கருமாரியம்மா என்றபாடல். இப்பாடலை தமிழ் சினிமாக்காரர்கள் ரீமிக்ஸ் செய்து டூயட் பாட்டாக்கி விட்டனர்.
ஹரி இயக்கத்தில், விஷால், பானு நடிப்பில் வெளியாகியுள்ள தாமிரபரணி படத்தில் இப்பாடலை ரீமிக்ஸ் செய்துடூயட் பாடலாக இடம் பெற வைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர்ராஜாதான் இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நா.முத்துக்குமார் ரீமிக்ஸ் பாடலை எழுதியுள்ளார். பாடலைப் பாடியது, குத்து படத்தில் இடம்பெற்ற போட்டுத்தாக்கு என்ற குத்துப் பாட்டைப் பாடிய ரோஷினியும், ரஞ்சித்தும்தான்.
கருப்பண்ணன் கையால என்னப் புடிச்சான் என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்கு பாஜக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்த செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளதாக தமிழிசைசெளந்தரராஜன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், கற்பூரநாயகியே கனகவல்லி பாடல் சாதாரணப் பாடல் அல்ல. அது இந்துக்களின்உணர்வோடு, கலந்த ஒன்று. இந்தபாட்டின் மெட்டைக் கேட்டாலே அம்மனின் உருவம் நம் மனக் கண் முன்தோன்றி ஆன்மீக சிந்தனையில் மூழ்கி விடுவோம்.
தமிழகத்தின் அத்தனை கோவில்களிலும் தவறாமல் ஒலிக்கும் அற்புதப் பாடல் இது. இப்படிப்பட்ட புனிதமானபாடலை காதல் காட்சிக்கு காப்பி அடிக்க பயன்படுத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
பழைய படங்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆட்டைக் கடித்துமாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிப்பது போல இப்போது ஆன்மீகப் பாடலையும் அநாகரீகமாகரீமிக்ஸ் செய்துள்ளனர்.
இயக்குநர் ஹரி, சிறந்த இயக்குநர், குடும்பப் பாங்கான படங்களை எடுப்பவர். கடவுள் பாட்டை குத்துப்பாட்டுக்கு பயன்படுத்துவதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். யுவன் ஷங்கர் ராஜா இப்படி ஒரு செயலைசெய்திருக்கக் கூடாது. நா. முத்துக்குமார் நல்ல கவிஞர்.
இப்படி மூன்று இளைஞர்களும் சமுதாயப் பார்வை உள்ளவர்கள். அப்படிப்பட்ட இவர்கள் கடவுள் பாட்டைகுத்துப் பாட்டாக்கியது வருத்தம் தருகிறது. உடனடியாக இந்தப் பாடலை மாற்ற வேண்டும் என்ார் தமிழிசை.












Click it and Unblock the Notifications