நாமக்கல் முட்டைகளுக்கு யு.ஏ.இ. தடை நீக்கம்
புனே:இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்ததடையை எமிரேட்ஸ் நீக்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான முட்டைகள் நாமக்கல்லில் இருந்துஅனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முதல் இந்த தடை நீக்க உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் ஆசியநாடுகளில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபுஎமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
துபாய்க்குத்தான் இந்திய முட்டைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தினமும் 75 லட்சம்முட்டைகள் துபாய்க்கு ஏற்றுமதியாகி வந்தன. இவற்றில் முக்கால்வாசி முட்டைகள் நாமக்கல்லில் இருந்து தான்சென்று கொண்டிருந்தன.
தற்போது பறவைக் காய்ச்சல் பீதி அறவே போய் விட்டதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கோரிதேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் 2 குழுக்கள் துபாய்க்கும், அபுதாபிக்கும் அனுப்பப்பட்டன.இக்குழுவில் ராசிபுரம் எம்.பி. ராணியும் இடம் பெற்றிருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் இந்தக் குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக தற்போது முட்டைகளை ஏற்றுமதி செய்ய விதித்திருந்ததடையை எமிரேஸ்ட்ஸ் நீக்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் செளதி அரேபியா தடையை நீக்கியது. இதன் மூலம் மேற்காசிய நாடுகள்முழுவதிலும் இந்திய முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது.
குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்திய முட்டைகளுக்கு தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications