இன்னும் கொலை வெறி தணியாத சுரேந்தர்!
நொய்டா:உ.பி. மாநிலம் நொய்டா அருகே நித்தாரி கிராமத்தில் ஏராளமான சிறுவர்,சிறுமியரைக் கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசியதாக கைதுசெய்யப்பட்டுள்ள சுரேந்தர் கோலிக்கு இன்னும் கொலை வெறி தணியவில்லைஎன்றுசிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நொய்டா அருகே மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான பங்களாவிலிருந்துஏராளமான எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. இன்னும் அங்கு தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள் வந்தவண்ணம் உள்ளது.
30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரைக் கொடூரமாகக் கொன்று உடல்களைசிதைத்தும், வெட்டியும் சாக்கடையில் வீசியுள்ளனர், மொஹீந்தர் சிங்கும், அவரதுவீட்டு வேலையாள் சுரேந்தர் கோலியும்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களிடம்முதல் கட்ட விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், சுரேந்தர் கோலிக்கு இன்னும்கொலை வெறி தணியவில்லை என்று தெ>வித்துள்ளனர்.
இன்னும் யாரையாவது கொல்லலாம் போலத் தோன்றுவதாகவும், வன்முறையுடனும்,முரட்டுத்தனத்துடனும் கோலி நடந்துகொள்வதாகவும், பேசி வருவதாகவும்கூறப்படுகிறது.
இதையடுத்து கோலியை கைவிலங்கிட்டு காவலில் வைத்துள்ளனர். அவரிடம்விசாரணை நடத்தும் அதிகாரிகள் தேவைப்பட்டால் கைத் துப்பாக்கியை வைத்துக்கொள்ளும்படியும் சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மொஹீந்தர் சிங்கையும், கோலியையும் தனித் தனி அறைகளில்வைத்துள்ளனர். இந்த நிலையில், சிறார்களைக் கொல்லப் பயன்படுத்தி கோடாரியைசிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications