பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 6 பெண்கள் பலி
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில்6 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
தைப் பூசத்தையொட்டி பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம்புதுப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.
ஒட்டன்சத்திரத்தையடுத்த திருமலைநாயக்கர்புரம்-குமாரபாளையம் இடையே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கோழிப் பண்ணைக்கு சொந்தமான மினி லாரிநாகர்கோவிலில் கோழிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது முருக பக்தர்கள் மீது திடீரென லாரி பாய்ந்தது. இதில் பக்தர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மீனா,கனகமணி, ரத்தினம், ஜோதி, போதுமணி, சின்னத்தாய் ஆகிய 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தனர்.
மேலும், லதா, சந்தியா, அய்யப்பன், மகேஷ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் எஸ்.பி. பாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து உடல்களை அங்கிருந்து அகற்றிபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்தவமனைக்குசிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குக் காரணமான லாரியின் டிரைவர் முருகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications