இன்றும் அதிமுக-மதிமுக வெளிநடப்பு
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி,உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ராஜினாமா செய்ய வண்டும்என்று கோரி சட்டசபையில் இன்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அவர்களைத் தொடர்ந்து மதிமுகவும் வெளிநடப்பு செய்தது.
சட்டசபையில் நேற்று சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாகவிவாதிக்க சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்துஅதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சபை கூடியதும் மீண்டும் அதே பிரச்சினையை அதிமுகஎழுப்பியது. அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், கேள்வி நேரத்தின்போதுஇதுபோன்ற பிரச்சினைகளை எழுப்ப முடியாது. பூஜ்ய நேரத்தில்தான் இதுபோலஎழுப்ப முடியும் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், சபாநாயகரைக் கண்டித்தும்வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து மதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் சட்டசபை லாபி அருகே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சுமார் கால் மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சட்டசபைஅதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் , கொறடா கே.ஏ. செங்கோட்டையன்ஆகியோர் பேசுகையில், வன்முறைத் தேர்தலை நடத்தியவர்களே மீண்டும் மறுதேர்தலை நடத்துவது கண் துடைப்பு நாடகமாகும்.
எனவே தேர்தல் ஆணையர், காவல்துறை ஆணையர், கூடுதல் ஆணையர், டிஜிபிஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகுதான் தேர்தலை நடத்தவேண்டும்.
இதுகுறித்து பேச எழுந்தால் சபாநாயகர் அனுமதி மறுக்கிறார். எனவேதான் இன்றும்வெளிநடப்புச் செய்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications