மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-வங்கி அதிகாரி கைது
திருநெல்வேலி:பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வரும் பீகார்மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து, அவரை கற்பழிக்க முயன்ற வங்கிமேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ளது செயின்ட் பால்ஸ்மெட்ரிகுலேஷன் பள்ளி. இதன் தாளாளராக சாதுராக் என்பவர் உள்ளார். 55 வயதானஇவர் நெல்லை டவுன் கிளை இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் மேனேஜராகவும்உள்ளார்.
![]() |
இவரது மனைவி அகஸ்டினா. இவர் வேறு ஒரு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.செயின்ட் பால்ஸ் பள்ளியில்,195 பேர் படிக்கின்றனர். இவர்களில் 17 மாணவிகள்,பள்ளி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பீகார், உ.பி. மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.கலவரங்களால் பாதிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களால் இங்கு வந்துசேர்க்கப்பட்டவர்கள் இவர்கள்.
அவர்களில் ஒருவர் கிரேசி. 14 வயதாகும் கிரேசி, 7ம் வகுப்பு படித்து வருகிறார்.பீகாரைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கியுள்ளார். இவரிடம் சாதுராக் அடிக்கடி செக்ஸ்சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
கையைப் பிடிப்பதும், வம்பு செய்வதுமாக இருந்து வந்த சாதுராக், ஒருமுறைகிரேசியிடம் மிகவும் அத்துமீறி பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
சாதுராக்கின் செயல் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சொல்லிஅழுதுள்ளார் கிரேசி. அவருக்கு ஏற்பட்ட சோகத்தை, சக மாணவியரில் ஒருவர் தனதுபெற்றோரிடம் கூற அவர்கள் கிரேசியை சந்தி"தது தைரியம் தந்து போலீஸில் புகார்கொடுக்க கூறினர்.
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் கிரேசி. அதன்பேரில் சாதுராக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகள் குளிக்கும்போது அதை ஓட்டை வழியாக பார்த்து ரசிப்பது இந்த செக்ஸ் சைக்கோவுக்கு பழக்கமாம்.இதை போலீஸ் விசாரணையின்போது அவரே தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications