மகளிர் கல்லூரிகளுக்கு தனி பஸ்-பாமக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் பெண்கள் கல்லூரிகளுக்கு தனி பஸ்களை இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என சட்டசபையில்போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சட்டசபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நேரு,

திருப்பூரிலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் அவினாசி, பல்லடம், பெருமாநல்லூர், ஊத்துகுளி ஆகியபகுதிகளுக்கு விரைவில் பெண்களுக்கென தனி பேருந்து இயக்கப்படும்.

சென்னையிலிருந்து திருப்பூருக்கு புதிய அல்டரா டீலக்ஸ் பஸ்சும் விடப்படும். தமிழ்நாட்டில் 400 புதியவழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூருக்கு மட்டும் 100 புதிய வழித்தடங்களில் பஸ்கள்இயக்கப்படுகின்றன என்றார்.

அப்போது பேசிய பாமக எம்எல்ஏ வேல்முருகன்,

சென்னையின் முக்கிய பகுதியான தி.நகருக்கு பலர் வருகினறனர். இந்த நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குசெல்லும் மாணவிகள் பல பாலியல் இன்னல்களுக்கு உள்ளாகினறனர். வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும்இந்த மாணவிகளுக்கு தனி பேருந்து இயக்கப்படுமா என்றார்.

இதற்கு பதிலளித்த நேரு, சென்னை நகரில் 2700 வழித்தடங்கள் இருந்தாலும் போன ஆட்சியில் பஸ்களைபுதுப்பிக்கவில்லை. இந்த ஆட்சியில் புதிதாக 450 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்லூரிகளுக்கு தனிபேருந்து விட முதல் அமைச்சரின் அனுமதி பெற்று நிச்சயம் ஆவண செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+