ராஜ் டிவியின் செய்தி ஆசிரியர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ராஜ் டிவியின செய்தி ஆசிரியர் கலைச் செல்வன் மாரடைப்பால் காலமானார்.
நடுநிலையான தமிழ் செய்திகளுக்கு பேர் போனது ராஜ் டிவி. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்கலைச்செல்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜன சக்தி இதழில் தனது நிருபர் வாழ்வை தொடங்கிய அவர்,பின்னர் சோவியத் நாடு, மாலைச் சுடர் இதழ்களில் பணியாற்றிய பின் விஜய் டிவியின் செய்திப் பிரிவில்சேர்ந்தார்.
அங்கு செய்திகள் நிறுத்தப்பட்ட நிலையில் ராஜ் டிவியில் இணைந்தார். இந் நிலையில் இன்று காலை அவருக்குவீட்டிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
53 வயதான கலைச் செல்வனுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications