டெல்லியில் புடின்-குடியரசு விழாவில் பங்கேற்பார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இன்று இந்தியா வந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங்வரவேற்றார்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க புடின் இந்தியா வந்துள்ளார். பெரும்பாலும்வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்க பிரதமர் விமான நிலையத்துக்குச் செல்வதில்லை.
ஆனால், கடந்த முறை அமெரிக்க அதிபர் புஷ், செளதி மன்னர் ஆகியோர் வந்தபோது மரபை மீறி விமானநிலையம் சென்றார் மன்மோகன் சிங்.
அதே போல இன்றும் டெல்லி பாலம் விமானப் படை விமான நிலையத்தில் புடினை அவர் மலர்க் கொத்துகொடுத்து வரவேற்றார்.
பின்னர் இருவரும் ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்தப் பயணத்தில் போது அணு சக்தி, ஆயுதங்கள், வர்த்தம் தொடர்பாக 10 ஒப்பந்தங்கள்கையெழுத்தாகவுள்ளன. இதன் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக 5 அணு உலைகளைரஷ்யா கட்டித் தர உள்ளது.












Click it and Unblock the Notifications