நொய்டா கொலையாளிகளுக்கு மக்கள் தர்ம அடி!
காஸியாபாத்:டெல்லி அருகே நொய்டாவில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரை கொடூரமாகக் கொன்று புதைத்தமொஹீந்தர் சிங், சுரேந்தர் கோலி ஆகியோரை வக்கீல்களும், பொதுமக்களும் சேர்ந்து இன்று சரமாரியாகஅடித்து உதைத்தனர்.
உ.பி. மாநிலம் நொய்டாவில் தொழிலதிபர் மொஹீந்தர் சிங் வீட்டிலிருந்தும் அருகில் உள்ள சாக்கடையிலிருந்தும்சமீபத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டையே உலுக்கியது. இந்தசம்பவம் தொடர்பாக மொஹீந்தர் சிங், அவரது வீட்டு வேலையாள் சுரேந்தர் கோலி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் சிபிஐ அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இன்றுடன் அவர்களதுகாவல் முடிவடைந்தது. இதையடுத்து இருவரையும் காஸியாபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தசிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
அவர்கள் வருவதை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். வழக்கறிஞர்களும் அதிக அளவில்கூடியிருந்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வெளியே கூட்டி வந்தனர். அவர்களைசிறையில் அடைப்பதற்காக போலீஸார் கூட்டிச் செல்ல வந்திருந்தனர்.
இருவரையும் பார்த்ததும் கூடியிருந்த பொதுமக்கள் கோபாவேசமடைந்தனர். கோபத்துடன் மொஹீந்தர் மற்றும்சுரேந்தர் மீது பாய்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வக்கீல்களும் சேர்ந்து கொண்டுபயங்கரமாக தாக்கினர்.
பாதுகாப்புக்கு குறைந்த அளவிலான போலீஸாரே இருந்ததால் இந்த சம்பவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்அவர்கள் திணறினர்.
போலீஸாரை தள்ளி விட்டு இருவரையும் பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். நிலை தடுமாறி கீழே விழுந்தமொஹீந்தரை காலால் உதைத்தனர். கடுமையாக தாக்கப்பட்டதால் மொஹீந்தர் மயக்கமடைந்தார். உடனடியாகஇருவரையும் மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications