சென்னை ராணுவ அதிகாரிக்கு கீர்த்தி சக்ரா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:காஷ்மீல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எதிரிகளுடன் மோதி வீர மரணமடைந்த 23 வயதானதமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி லெப்டினன்ட் பார்த்திபனுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படுகிறது.

சென்னை பம்மல் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் வி. நடராஜன். இவரது மகன்பார்த்திபன். தந்தையைப் போலவே ராணுவத்தில் சேர்ந்தார்.

பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயிற்சியை முடித்தபார்த்திபன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டார்.

பணியின்போது கடந்த அக்டோபர் மாதம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுறுவ முயன்றதீவிரவாதிகளுடன் மோதல் நடந்தது. இதில் பார்த்திபன் வீர மரணமடைந்தார்.

பணியில் சேர்ந்து 7 மாதங்களிலேயே தீவிரவாதிகளுடன் மோதி மரணம் அடைந்த பார்த்திபனின் வீரத்தைப்பாராட்டும் வகையில் மரணத்திற்குப் பின்னர் வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கீர்த்தி சக்ரா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே மிகவும் இளைய வயது கொண்டவர்பார்த்திபன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விருதினை வழங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+