விஜயகாந்த் வீட்டு ரெய்டு-பாஜகவின் சந்தேகம்
சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிலும், கட்சி அலுவலகத்திலும் வருமான வரிசோதனையை நடத்தியிருப்பது தவறான முன்னுதாரணம், அரசியல் உள்நோக்கம்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேமுதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாகவளர்ச்சி அடைந்து வருகிறது என்பது உண்மை. எதிர்காலத்தில் அது எப்படி இருக்கும்என்பதை கணிக்க முடியாது.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வளர்ந்துள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. இந்தநேரத்தில் சோதனை நடத்தியிருப்பது சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
தேர்தல் நேரத்தில் தேமுதிகவுக்கு நிதியுதவி அளித்தவர்களாக கூறப்படுபவர்களின்(ஜேப்பியார், கனகராஜ்) வீடுகளிலும் சோதனை நடத்தியிருப்பது இது அரசியல்உள்நோக்கம் கொண்டதுதான் என்ற சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அரசியல் கட்சி அலுவலகத்தில் முதல் முறையாக வருமான வரி சோதனைநடத்தியுள்ளனர். இது மிகத் தவறான முன்னுதாரணம்.
சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் பின்னணி இருப்பதாக கூறியுள்ள பண்ருட்டிராமச்சந்திரன், பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்று பேசியுள்ளார். இதுஎதிர்காலத்தில் சோதனையைத் தவிர்ப்பதற்காக என்றே கருதுகிறேன்.
அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் பழனி மாணிக்கம் கூறினால்,கிடைத்த ஆதாரங்களை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலை பாஜக சந்திக்கும். மீண்டும் வன்முறை நடந்தால்அதையும் சந்திப்போம். ஆனால் தமிழக தேர்தல் ஆணையர் அந்தப் பொறுப்புக்குசற்றும் தகுதியவற்றவர். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அவர் ராஜினாமாசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை.
தேர்தல் ஆணையரை மாற்றக் கோரி நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடரும்.இதுகுறித்து யோசித்து வருகிறோம், வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications