முதல்வரை கொல்ல போவதாக மிரட்டல் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் ஆர்.டி.எக்ஸ். குண்டை வைத்து முதல்வர் கருணாநிதியை கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்த கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமைச் செயலகத்திற்கு புதன்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் நான் துணைத்தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

எனவே குடியரசு தின விழாவின்போது தலைமைச் செயலகத்தில் ஆர்.டி.எக்ஸ். குண்டு வைத்து தகர்க்கப்போகிறேன். முதல்வர் கருணாநிதியை கொலை செய்வேன், என்னை யாராலும் பிடிக்க முடியாது. இப்படிக்குகும்மிடிப்பூண்டி, நரசம்பாளையம், ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீஸார் இதுகுறித்து விசாரித்தபோது அந்த ராஜா திமுகவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரதுபெயரில் யாரோ இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+