கரும்பு தோட்டத்தில் ஊடு பயிராக கஞ்சா!
ஈரோடு:ஈரோடு அருகே கரும்பு தோட்டத்தில் ஊடு பயிராக பயி>டப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிஅழிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேனியைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வீரியன்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (36) தனக்குச் சொந்தமான நிலத்தில்மஞ்சள், வாழை மற்றும் கரும்பு பயிரிட்டுள்ளார். நான்கு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்புடன் ஊடுபயிராககஞ்சா செடியும் பயிரிட்டிருந்தார்.
கஞ்சா பயி>டுவதில் தேர்ச்சி பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன், வீரண்ணன், பொங்கண்ணன் ஆகியமூன்று பேரையும் தனது தோட்டத்தில் வேலைக்கு வைத்திருந்தார். இவர்கள் மூவரும் ஏற்கனவே கஞ்சாகடத்தியதாக தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள்.
பழைய குற்றவாளிகள் என்பதால் மூவரையும் தேனி மாவட்ட போதை நுண்ணறிவு தடுப்பு பிரிவு போலீசார்கண்காணித்து வந்தனர். இவர்கள் ஏன் கரும்பு தோட்டத்தில் வேலை பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.
இந் நிலையில் போதைப் பொருள் தடுப்பு பி>வு டி.எஸ்.பி. குமரேசன், அறச்சலூர் இன்ஸ்பெக்டர் குலாம், சப்இன்ஸ்பெக்டர்கள் சிவ செந்தில்குமார், நர்மதா தேவி மற்றும் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலையில்பாலசுப்பிரமணியம் தோட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசாரை கண்டதும் பாலசுப்பிரமணியம், அவரது சகோதரர் குப்புசாமி, செல்வம், வீரண்ணன், பொங்கண்ணன்ஆகியோர் தப்பி விட்டனர்.
பாலசுப்ரமணியத்தின் தோட்டத்தில் ஒரு குழிக்கு ஐந்து கஞ்சா செடிகள் வீதம் மொத்தம் 260 குழிகளில் ஆயிரத்து300 கஞ்சா செடிகள் பயி>டப்பட்டிருந்தன. ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 6 ஆயிரத்து 600 கிலோ கஞ்சா செடியைபோலீஸார் தீயிட்டு அழித்தனர்.
தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications