கேரளாவுக்குக் கடத்தப்பட்ட 8 மாணவிகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:சேலம் வழியாக கேரளாவுக்கு எட்டு மாணவிகளை கடத்தி சென்ற பெண்ணை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.

சேலம் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலம்,பாலக்காடு வழியாக மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக எட்டு மாணவிகளுடன் ஒருபெண் காத்திருந்தார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸார் அப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில்,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சுத்தமலை பகுதியை சேர்ந்த அப்பெண்ணின் பெயர் லதா (23) எனதெரியவந்தது.

சுத்தமலை, மேலநந்தல் ஆகிய கிராமங்களிலிருந்து பெற்றோரின் ஒப்புதலுடன் கேரளாவுக்கு மாணவிகளை வீட்டுவேலைக்காக அழைத்து செல்வதாகவும் போலீஸா>டம் லதா தெரிவித்தார்.

அவருடன் இருந்த சுத்தமலை, மேலநந்தலை சேர்ந்த கீதா (11), ஜெயந்தி (13), அம்மு (15), வாசுகி (14), கவிதா(15), சுதா (17), பரமேஸ்வரி (14), கலைச்செல்வி (17) ஆகிய எட்டு மாணவிகளையும் ரயில்வே போலீஸார்மீட்டனர்.

பெற்றோரின் ஒப்புதலுடன் கேரளாவுக்கு லதா அழைத்து செல்கிறாரா? அல்லது மாணவிகளை கடத்திசெல்கின்றாரா? என ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரால் மீட்கப்பட்ட மாணவிகள் எட்டு பேரும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசினர் மகளிர்காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திய பின்னர் அவர்களிடம் மாணவிகளைஒப்படைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

லதாவை போலீஸார் கைது செய்தனர். இதுபோல அவர் எத்தனை பேரை கேரளாவுக்கு அனுப்பியுள்ளார் என்பதுகுறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+