போதையில் எஸ்ஐ கழுத்தை நெரித்த ஏட்டய்யா!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:போதை தலைக்கேற தனது உறவினருடன் மதுக் கடையில் ரகளை செய்த தலைமைக் காவலரை பிடிக்க முயன்றசப்இன்ஸ்பெக்டரின் கழுத்தை நெரித்தார் அந்த போலீஸ்காரர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மப்புஏறியபோலீஸ்காரரையும், உறவினரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை கியூ பிரிவு போலீஸில் டிரைவராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது உறவினர் அந்தோணிஅருள்தாஸுடன் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு சரக்கடிக்க சென்றார்.

போதை அதிகமாகி இருவரும் உற்சாக பறவைகளாக மாறினர். இதையடுத்து மதுக் கடையில் ரகளையில்இறங்கினர்.பாரில் இவர்கள் செய்த ரகளையைப் பார்த்த மதுக் கடைக்காரர்கள் போலீஸுக்குப் போன் செய்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், தலைமைக் காவலர் கருப்பையா ஆகியோர் விரைந்து இருவரையும் பிடிக்கமுயன்றனர்.ஆனால் அவர்களை தள்ளி விட்டு சண்டை போட்டுள்ளனர் இருவரும்.

இதையடுத்து இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் செளந்தரராஜன் அங்கு வந்தார். ராஜேந்திரனையும்,அந்தோணியையும் பிடித்து ஜீப்பில் ஏற்ற முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ராஜேந்திரன், செளந்தரராஜன்கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த மற்ற போலீஸார், செளந்தரராஜனை, ராஜேந்திரனின் பிடியிலிருந்து மீட்டனர். போலீஸ்காரரைஅடக்க போலீஸ்காரர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த பொதுமக்கள் உதவிக்கு வந்தனர். அத்தனைபேருமாக சேர்ந்து ராஜேந்திரனையும், அந்தோணி தாஸையும் தூக்கி ஜீப்புக்குள் போட்டனர்.

பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும்கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+