பெண்களிடம் ரகளை-ராணுவ வீரர்கள் கைது
பாட்னா:ரயிலில் பெண் பயணிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு ரகளை செய்து ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 9 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து கெளஹாத்திக்கு வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின்பொதுப் பெட்டியில், ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் பயணித்தனர்.
பீகார் மாநிலம், முகல்சராய் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்த போது சில பயணிகள் பொதுப் பெட்டியில்ஏறினர். குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்கள் இந்த பெட்டி "ரிசர்வ் செய்யப் பட்டுள்ளது. இதில், யாரும்ஏறக்கூடாது. கீழே இறங்குங்கள் என்று கூறினர்.
ஆனால் அந்தப் பெட்டி ரிசர்வ் செய்யப்படவில்லை என்பதால் பயணிகள் ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். அவர்களை மீறி ரயில் பெட்டியில் ஏறினர்.
இதனால் கோபமடைந்த வீரர்கள் பயணிகளை அடித்து உதைத்தனர். அவர்களின் பொருட்களை எடுத்துவெளியே வீசினர். சில வீரர்கள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் பக்சார் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ரயில்பக்சார் வந்தபோது ரகளையில் ஈடுபட்ட நான்கு ராணுவ வீரர்கள், இரண்டு பி.எஸ்.எப். வீரர்கள் மற்றும் மூன்றுபேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications