சொத்து-மாஜி அதிமுக எம்எல்ஏவுக்கு சிறை
சென்னை:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தேனி பன்னீர் செல்வத்திற்கு 3 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரு மனைவிகளுக்கு ஜாமீன் வழங்கியது.
தேனி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரைவருமானத்திற்கு அதிகமாக ரூ. 21.36 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்னைதனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1997ம் ஆண்டு பன்னீர்செல்வத்தின் மனைவிகள் ஜானகி, தனபாக்கியம் ஆகியோரும் குற்றவாளிகளாகசேர்க்கப்பட்டனர். கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று நீதிபதி தட்சிணாமூர்த்தி தீர்ப்பு வழங்கினார்.இதையொட்டி தனது 2 மனைவிகளுடனும் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில் பன்னீர் செல்வத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம்விதிக்கப்பட்டது. இரு மனைவிகளுக்கும் தலா 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து பன்னீர் செல்வம் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி ரூ. 20 ஆயிரம் ரொக்கம்மற்றும் இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் பன்னீர் செல்வம் மற்றும் அவரது மனைவிகளை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications