பேய் ஓட்டிய மந்திரவாதி மாண்டிரேக் லாலு!
பாட்னா:பீகார் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள வந்த மத்திய ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டினார்.
புல்வாரியா கிராமம், லாலுவின் சொந்த ஊர். இங்குதான் பிறந்தார் லாலு. இக்கிராமத்தில் புதிதாக கிராம தேவதைகோவில் கட்டப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு திருவிழா எடுக்கப்பட்டது.
விழாவில் லாலுவும் கலந்து கொண்டார். அசல் கிராமத்தானாக மாறிய அவர் படு உற்சாகமாக விழாவில்பங்கேற்றார். அப்போது அங்கு அவரிடம் ஒரு பெண்ணைக் கூட்டி வந்தனர்.
இப்பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்கு சாப் என்று லாலுவிடம் அவர்கள் கூறவே, உடனே மந்திரவாதி மாண்ட்ரேக்ஆக மாறினார் லாலு. வாயில் எதையோ முனுமுனுத்தபடி அப்பெண்ணுக்கு பேய் ஓட்டினார். இதை ஒரு தனியார்தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது.
கிராமப் பெண்ணுக்கு லாலு பேய் ஓட்டியது. பீகாரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் லாலுவைகடுமையாக சாடியுள்ளது.
அவர் மீது பில்லி சூன்ய செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவானந்த திவாரி கோ>யுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், கோவிலில் சிறப்பு பூஜைக்காக ரூ. 80 லட்சம் பணத்தையும், கோவில்கட்டுவதற்காக ரூ. 15 லட்சம் பணத்தையும் ரயில்வே துறையிலிருந்து லாலு செலவிட்டிருக்கிறார்.
கோவில் கும்பாபிஷேகம், அதற்காக சிறப்பு ரயில் ஆகியவற்றுக்காக ரூ. 30 லட்சத்தை செலவிட்டுள்ளார் லாலு.இந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து வருமான வ>த்துறை விசாரிக்க வேண்டும் என்றும் குமுறியுள்ளார்திவாரி.












Click it and Unblock the Notifications