விஜய்காந்த் ரெய்டு: தப்பேயில்லை-ராமதாஸ்
சென்னை:சென்னை நகரில் பள்ளிக் கூடங்கள் அருகே விறுவிறுப்பாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்காமல்,போதைப் பொருள் தடுப்புப் போலீஸ் பிரிவு சீரழிந்து, செயலிழந்து நிற்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் சென்னை பள்ளிக்கூடங்கள் அருகே கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் சகஜமாகவிற்கப்படுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ.வேல்முருகனும் காட்டமாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து சென்னை போலீஸார் அவசரம் அவசரமாக கஞ்சா வேட்டையில் இறங்கினர். இருப்பினும் இந்தகஞ்சா வேட்டை தற்போது நடப்பது போலத் தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் மீண்டும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,
சென்னையில் உள்ள முக்கியமான, மிகப் புகழ் பெற்ற, ஆங்கில வழிக் கல்வியைப் போதித்து வரும் 3 முக்கியப்பள்ளிகளின் முன்பாக கஞ்சா விற்பனை படு விறுவிறுப்பாக நடக்கிறது.
இது போலீஸாருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அதை தடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.அந்தப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்கப்படுவதை தடுக்க போலீஸார் முயற்சிக்கவில்லை.
போதைப் பொருள் போலீஸ் பிரிவில் பறக்கும் படையெல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பிரிவேஇப்போது ஊழல் மலிந்து, சீர்கெட்டு, சீரழிந்து, செயலிழந்து கிடக்கிறது என்றார்.
விஜயகாந்த் உள்ளிட்டோர் இருப்பிடங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்த கேள்விக்கு ராமதாஸ்பதிலளிக்கையில், சுய நிதிக் கல்லூரிகள் என்ற பெயரில் கல்லூ>களை நடத்துகிறவர்கள், கோடி கோடியாககொள்ளை அடிக்கிறார்கள். இவர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. இது எல்லோருக்கும்தெரிந்த உண்மை, பரம ரகசியம் கிடையாது.
எனவே இதுபோன்ற சோதனையில் தவறு இல்லை, இது தாமதமான நடவடிக்கை. இவர்களைப் போல நிறையபேர் உள்ளனர் என்றார்.
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள்தான் மீண்டும் போட்டியிடுவார்கள்.சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் இடம் பெற வேண்டும்.வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications