100 வார்டு தேர்தல்-தடை கோரி அதிமுக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஏற்கனவே அதிமுக கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்ததால் காலியாக உள்ள 2 இடங்களையும் சேர்த்து 100 வார்டுகளுக்கு பிப்ரவரி 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான மனு தாக்கலும் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்திருந்தது.

இந் நிலையில் மறு தேர்தலுக்கே தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில்,

தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் அப்பதவியில் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கக் கோரி ஏற்கனவே அதிமுக தொடர்ந்த வழக்குஉயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் அவசர அவசரமாக 100 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே இந்ததேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+