தமிழக சட்டம் ஒழுங்கு: பாஜக திருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை என்ற போதிலும் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தமிழக பாஜகதலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் நடந்த பாஜக செயற்குழு முறைப்படுத்துதல் கூட்டம் நடந்தது. இதில் இல.கணேசன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்குகெடவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன.

ஆட்டிப்படைத்து வந்த கிரில் கொள்ளையர்களை காவல்துறை பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தினர் என்று தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் வங்கதேசத்தவர்கள் ஊடுறுவல் அதிகம் உள்ளதாக முன்பே பாஜக கூறியிருந்தது. ஆனால்அதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தற்போது பிடிபட்டுள்ள கிரில் கொள்ளையர்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேலாவது மத்திய அரசும், மாநில அரசும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் தற்போதுள்ள தேர்தல்ஆணையரின் தலைமையில் தேர்தல் நடைபெறக் கூடாது. அவரை மாற்றக் கோரி பாஜக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+