ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவர் கைது
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை என்ற ஊரில் பள்ளிக் கூடத்தில் வைத்தே ஆசிரியரைப் படுகொலை செய்த மாணவரை போலீஸார் கைதுசெய்தனர்.
ஏழாயிரம்பண்ணையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் அக்கவுண்டன்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (45). இப்பள்ளியில்கடந்த ஆண்டு பிளஸ் டூ படித்தவர் ஜெயகணேஷ். 18 வயதாகும் கணேஷ், சரியாக படிக்கவில்லை. இதனால் ஆசிரியர் செல்வராஜ் அவரைதிட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கணேஷ் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். இருந்தாலும் செல்வராஜ் மீது அவருக்கு ஆத்திரம் தீரவில்லை. அவரைப்பழிவாங்க உறுதி பூண்டார்.
நேற்று பள்ளிக்கூடத்தில் செல்வராஜ் பிளஸ்டூ மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பை முடித்து விட்டுஆசிரியர்களுக்கான ஓய்வறையில் அவர் அமர்ந்திருந்தார்.
அப்போது ஜெயகணேஷ் அங்கு வந்தார். செல்வராஜை நெருங்கிய அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக செல்வராஜைகுத்தினார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வராஜை ஆசிரியர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்பரிதாபமாக இறந்தார்.
செல்வராஜைக் கொலை செய்து விட்டுத் தப்பிய முன்னாள் மாணவர் ஜெயகணேஷை போலீஸார் கைது செய்தனர். அறிவுரை சொல்லித் திட்டியஆசிரியரை மாணவர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications