தேசிய விளையாட்டு: சாந்திக்கு இடமில்லை!
சென்னை:அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 33வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணியில்வீராங்கனை சாந்தி சேர்க்கப்படவில்லை.
கவுஹாத்தியில், 33வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 9ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக தடகள அணிஅறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 40 பேர் இடம் பெற்றுள்ள இதில், 20 பேர் வீரர்கள், 20 பேர் வீராங்கனைகள். இதில் சாந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
சமீபத்தில் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வென்றார் சாந்தி. ஆனால் பாலின சோதனையில் அவர்தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இதனால் பெரும்சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், தமிழக அணியில் சாந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
சாந்தி அணியில் இடம்பெறாதது குறித்து தமிழக அமெச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் நீலசிவலிங்கசாமி கூறுகையில், முதலில் சாந்தியின் பெயர்சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய தடகள சம்மேளனத்திலிருந்து அவரது பெயரை நீக்குமாறு கோரி கடிதம் வந்தது.
ஏன் நீக்க வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்களின் உத்தரவுப்படி சாந்தியின் பெயரை நீக்கியுள்ளோம்என்றார்.
பாலின சர்ச்சையைப் பொருட்படுத்தாமல், சாந்தியின் சாதனையைப் பாராட்டி தமிழக அரசு சாந்திக்கு பரிசு வழங்கி கெளரவித்தது. ஆனால் தமிழகஅணியில் அவருக்கு வழங்கப்பட்ட இடத்தை இந்திய தடகளச் சங்கம் தடுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், தமிழக அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சாந்திக்கு அணியில் இடம் இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications