பாலாறு-கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
சென்னை:தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசிக்காமல் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்பட மாட்டாது என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிகூறியுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம்அருகே கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துவருவது குறித்து 1.2.2007 அன்று முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து 3.2.2007 அன்று காலையில் தமிழக முதல்வர், ஆந்திர முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆந்திர அரசு பாலாற்றில்தடுப்பணை கட்ட எடுத்து வரும் முயற்சி குறித்துப் பேசினார்.
ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹதராபாத்துக்கு வந்து நேரில் என்னை சந்தித்தபோது அவர்களிடம்தெரிவித்தவாறு, தமிழக அரசைக் கலந்து கொள்ளாமல், எந்த முயற்சியையும் ஆந்திர அரசு எடுக்காது என்றும், இரு மாநிலம் சம்பந்தப்பட்டபிரச்சினையில், உறவு பாதிக்கப்படுகிற வகையில், ஆந்திர அரசுஈடுபடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும், இன்னும் 2 நாட்களில் விவரமாக கடிதம் ஒன்றை தமிழக முதல்வருக்கு எழுதுவதாகவும்தெரிவித்துள்ளார் என்று துரைமுருகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications