பைக் மோதி ஆத்திரம்-தூக்கி வீசி கொன்ற யானை
கன்னியாகுமரி:பைக் மோதியாதால் ஆத்திரமடைந்த யானை பைக்கில் சென்றவரை தூக்கி வீசி கொன்றது. மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மாராயபுரம் மந்தாரம் பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வரிகிறது.திருவிழாவையொட்டி 17 யானைகளின் ஊர்வலம் நடந்தது.
சென்னித்தோட்டம் என்ற இடத்தில் யானை ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் ஊர்வலத்தை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது பைக்கின் பின் பகுதி ஆதித்யன் என்ற யானையின் மீது உரசியது.
இதனால் மிரண்ட யானை துதிக்கையால் பைக்குடன் சேர்ந்து இருவரையும் தூக்கி வீசியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும்அப்பகுதி வழியாக வந்த ஒரு காரையும் உருட்டி விட்டது.
இதையடுத்து யானையுடன் வந்த பாகன்கள், யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் மீதியில்அலறியடித்து ஓடினர்.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஹரிகிருஷ்ணகுமார் (27) என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் யானைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். பின்னர் ஒரு யானையுடன் ஊர்வலம் நடந்தது.












Click it and Unblock the Notifications