3வது நீதிபதியின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி பி.கே.மிஸ்ராவின் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலின்போது பெரும் வன்முறை நடந்தது. இந்த வன்முறைக்கு திமுகவினர்தான்காரணம், எனவே நடந்த தேர்தலை ரத்து செய்து விட்டு 155 வார்டுகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி அதிமுக, மதிமுகஉள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் ஆளுக்கு ஒரு தீர்ப்பு கொடுத்தனர். இதனால் இறுதித்தீர்ப்பை அறிய 3வது நீதிபதியாக பி.கே.மிஸ்ராவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அறிவித்தார்.

நீதிபதி பி.கே.மிஸ்ரா கடந்த சில நாட்களாக இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்தார். அவரது விசாரணை நேற்றுடன் முடிந்தது. இந்தவிசாரணையின் போது, திமுக, அதிமுக, மதிமுக, பாஜக, தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகிவாதாடினர்.

விசாரணையின்போது ஏற்கனவே இரு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்புகளில் ஏதாவது ஒன்றை ஒட்டித்தான் தீர்ப்பு வழங்கப்படுமே தவிர புதிதாக 3வதுஒரு தீர்ப்பை தன்னால் கூற இயலாது என்று நீதிபதி மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

நான்கு நாட்கள் நடந்த விசாரணை நேற்றுடன் முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+