விஜயகாந்த் பிரசாரம் இன்று தொடக்கம்
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் தேமுதிகவின் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று முதல் தொடங்குகிறார். தெருத்தெருவாக சென்று அவர் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார் விஜயகாந்த். இதில் 14 பேரின் மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன. மேலும் சிலவேட்பாளர்கள் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக வாபஸ் பெற்று விட்டனர்.
இந்த நிலையில் 33 வார்டுகளில் போட்டியின்றி திமுக கூட்டணியினர் வெற்றி பெற்றனர். எனவே 67 வார்டுகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல்நடக்கவுள்ளது. இந்த 67 வார்டுகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த 67 வார்டுகளிலும் விஜயகாந்த் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இன்று மாலை 6 மணிக்குபுரசைவாக்கம் புல்லாரெட்டி அவென்யூ பகுதியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகிறார்.
இந்தக் கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்களை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறார்.
தீபம் சின்னம்:இந்த நிலையில், தேமுதிக வேட்பாளர்களுக்கு தீபம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் முரசு மற்றும் தீபம் என இரு சின்னங்களில் இந்தக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல சட்டசபைத் தேர்தலிலும் இரு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
இந்த முறை மறு தேர்தலில் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தீபம் சின்னம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications