நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் திமுக ரகளை
சென்னை:சென்னை அருகே பொழிச்சலூரில் மதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் புகுந்த திமுகவினர் கூட்டதில் பேசிக் கொண்டிருந்த மதிமுக கொள்கைவிளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களைத் தாக்கினர். இதனால் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
மதிமுக சார்பில் பொழிச்சலூரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்புப் பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர்பேசுகையில், தமிழக தொழில்துறை அமைச்சரும், ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான தா.மோ. அன்பரசன் குறித்து கடுமையாக குற்றம்சாட்டிப் பேசினார்.
அப்போது அங்கு தி.கவினர் பெரும் திரளாக கூடினர். பல்லாவரம் நகராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுகவினர் பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
நாஞ்சில் சம்பத் தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி கலாட்டா செய்தனர். ஆனால் அதை மறுத்த சம்பத் தொடர்ந்து பேசமுயன்றார். இதையடுத்து திமுகவினர் மேடையில் ஏறி சம்பத் உள்ளிட்ட மேடையில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
மின் விளக்குகள், ஒலிபெருக்கிகளை அடித்து நொறுக்கினர். மின் இணைப்பையும் அவர்கள் துண்டித்தனர். பின்னர் அங்கு என்ன நடந்தது என்றேதெரியாத அளவுக்கு பெரும் வன்முறை மூண்டது. இதில் 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
பின்னர் திமுகவினர் அங்கிருந்து ஓடி விட்டனர். இதையடுத்து மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டு மீண்டும் பொதுக்கூட்டம் தொடர்ந்தது.
இந்தத் தாக்குதல் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் மதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications