மனிதக் கடவுளாக வந்த நீதிபதி: விஜயகாந்த்
சென்னை:மனிதக் கடவுளாக வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக சிறப்பான தீர்ப்பைவழங்கியுள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் 67 பேரையும் அறிமுகப்படுத்தும் கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று இரவு அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடந்தது.
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடம் போல பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜயகாந்த் தனது கட்சிவேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் விஜயகாந்த் பேசுகையில், யாரும் தேர்தல் பணிகளைச் செய்யக் கூடாது என்பதற்காக வேகமாக தேர்தல் தேதியை அறிவித்து 8 நாட்கள்மட்டுமே பிரசாரத்துக்கு வழங்கியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடக்கவில்லை, வன்முறை நடந்துள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா மனிதகடவுளாக வந்து சரியான தீர்ப்பு சொல்லியுள்ளார்.
எங்களது வேட்பாளர்களில் 7 பேரைத் தவிர மற்ற அனைவருமே கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்களுக்காக வேட்பு மனுவை சரியாகதாக்கல் செய்யத் தெரியாது? திட்டமிட்டுத்தான் 14 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
நான் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் யாரையும் நம்பி இல்லை, மக்களையும், கடவுளையும் மட்டுமே நம்புகிறேன். எங்களது 67வேட்பாளர்களையும் தேர்வு செய்து மாநகராட்சிக்கு அனுப்புங்கள். பிறகு அவர்களின் செயல்பாடுகளைப் பாருங்கள்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துப் பள்ளிகளிலும் படிக்கவைக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அந்தப் பள்ளிகளின் தரம் உயரும்.
மாணவ, மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது செல்போன்கள் மூலம், எங்களின் தீபம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரிஎஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்யுங்கள் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications