ஹட்ச் செல்போன் நிறுவனத்தை ரூ. 85,000கோடிக்கு வாங்கும் வோடாபோன்
டெல்லி:இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனமான ஹட்ச் நிறுவனத்தை இங்கிலாந்தின் வோடாபோன் நிறுவனம் ரூ. 85,000 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ், இந்துஜாக்கள் ஆகியோரும் போட்டியிட்டனர்.
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த போட்டியின் இறுதியில் வோடாபோன் வென்றுள்ளது.
இந்தியாவின் 4வது மிகப் பெரிய செல்லுலார் நிறுவனம் ஹட்ச் ஆகும். இந்த நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்திடம் உள்ளன.மீதி 67 சதவீத பங்குகள் ஹட்சின்சன் நிறுவனத்திடம் உள்ளன.
ஹட்சின்சனிடம் இருந்து 67 சதவீத பங்குகளையும் வாங்கிக் கொள்ள எஸ்ஸார் முயன்றது. ஆனால், அவர்கள் சொன்ன விலையை ஹட்சின்சன்ஏற்கவில்லை.
இந் நிலையில் ஹட்சின்சன் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களிடம் உள்ள எல்லா ஹட்ச் பங்குகளையும் சேர்த்து 19 பில்லியன் டாலர்களுக்கு (85,000கோடி) வோடாபோன் வாங்கவுள்ளது.
அதே நேரத்தில் ஹட்ச் நிறுவனத்தை வாங்க முயன்று தோற்ற எஸ்ஸார் நிறுவனத்தை தொழில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ள வோடாபோன் முன்வந்துள்ளது.
வருமான விகிதத்தின் அடிப்படையில் உலகின் முன்னணி செல்போன் நிறுவனம் வோடாபோன் தான் என்பது குறிப்பட்டது.












Click it and Unblock the Notifications