எல்லையில் தமிழர்-கன்னடர் போட்டி போராட்டம்
சென்னை:கடந்த சில நாட்களில் இருமுறை தமிழக எல்லைக்குள் ஊடுறுவி வந்து கன்னடர்கள் தீப்பந்த ஊர்வலம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால்,நேற்று மாலை முதல் தமிழக எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கன்னட அமைப்பினருக்குப் போட்டியாக ஓசூரிலிருந்து கர்நாடக எல்லை நோக்கி பேரணியாக கிளம்பிய தமிழ் மக்கள்கூட்டமைப்பைச் சேர்ந்த 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னட அமைப்புகள் சில 2 முறை தமிழக எல்லைக்குள் வந்து காவிரியும் எங்களுக்குத்தான், ஓசூரும் எங்களுக்குத்தான் என்று தீப்பந்தம் ஏந்தியும்,சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தினர்.
இதனால் கொதிப்படைந்த தமிழ் அமைப்புகள் பல ஒன்று சேர்ந்து தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளன. இந்தஅமைப்பினர் 80 பேர் நேற்று ஓசூர் அருகே உள்ள தமிழக எல்லைப் பகுதியான ஜூஜூவாடியிலிருந்து காலிக் குடங்களுடன் கர்நாடக எல்லைநோக்கி ஊர்வலமாக கிளம்பினர்.
காவிரியும் எங்களுக்குத்தான், பெங்களூரும் எங்களுக்குத்தான் என்று கோஷமிட்டபடி கிளம்பிய அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைதுசெய்தனர்.
தமிழக எல்லைப் பகுதியில் கன்னடர்கள் ஊடுறுவாத வகையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications