திமுக தனித்து போட்டியிட தயாரா?-விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஆட்சிக்கும் ஊழல் செய்வதற்கும் மட்டும் கூட்டணி வைத்தால் போதாது. மக்களுக்கு நன்மை செய்யவும் கூட்டணி வைக்க வேண்டும் எனதிமுகவைத் தாக்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஜய்காந்த் சூளைமேடு பகுதியில் பேசியதாவது:

தேமுதிகவை ஆரம்பித்து ஒரு வருடம் 4 மாதம் தான் ஆகிறது. ஆனால், அதற்குள் 3வது தேர்தலை சந்திக்கிறோம். நான் எந்தக் கட்சியின்கூட்டணியையும் நம்பி நிற்கவில்லை. மக்களாகிய உங்களை நம்பியே போட்டியிடுறோம்.

100 வார்டுகளுக்கு தேர்தல் என்றார்கள், ஆனால் 67க்குத் தான் நடக்கிறது. மீதி வார்டுகளில் வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்துவென்றுவிட்டார்கள். யாரையும் விடவில்லை, எல்லோரையும் மிரட்டியுள்ளார்கள்.

இந்த மிரட்டலுக்கு பயந்து சூளைமேடு 77வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சித்ராவைக் கூட அவரது கணவர் போட்டியிலிருந்து விலகிவிடலாம் என்று கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு தேர்தலை நடத்துவதைவிட பேசாமல் அவர்களே கவுன்சிலர்களை நியமித்துக் கொள்ளலாம்.

திமுக அரசு கவர்ச்சி திட்டங்களை தான் அறிவிக்கிறது. வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை.

தண்ணீருக்காக மற்ற மாநிலங்களை நம்பித்தான் இருக்கிறது தமிழகம். தண்ணீர் வரவில்லை என்றால் உடனே மத்திய அரசு கூட்டணியை விட்டுவிலகி இருக்க வேண்டாமா?.

ஆட்சிக்கும் ஊழல் செய்வதற்கும் மட்டும் கூட்டணி வைத்தால் போதாது. மக்களுக்கு நன்மை செய்யவும் கூட்டணி வைக்க வேண்டும்.

திமுக கூட்டணியை நம்பித்தான் நிற்கிறது. அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடத் தயாரா?. மூன்றாம் இடத்தில் இருந்த நாங்கள் இரண்டாவதுஇடத்துக்கு வளர்ந்திருக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+