9ம் வகுப்பு மாணவி கற்பழித்துக் கொலை!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:தர்மபுரி அருகே 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பட்டகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சுமதி (வயது 15). தனதுபாட்டில் வீட்டில் தங்கி 9வது வகுப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு சுமதி பள்ளிக்குச் சென்றவர் வீடுதிரும்பவில்லை.
பல இடங்களில் அவரைத் தேடிப் பார்த்தனர். அப்போது பட்டகப்பட்டி கரும்புத் தோட்டத்தில் கழுத்துநெரிக்கப்பட்ட நிலையில் சுமதி பிணமாக்க கிடந்தார். அவரைக் கற்பழித்து விட்டு பின்னர் கொலைசெய்ததுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications