கர்நாடக தமிழர்களுக்காக வைகோ உண்ணாவிரதம்
சென்னை:கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் எதிரொலியாக கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யக் கோரி கர்நாடக அரசு, மத்தியஅரசு ஆகியவற்றை வலியுறுத்தி மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வைகோ தலைமையில் போராட்டம் நடக்கிறது. நிகழ்ச்சியில் வைகோபேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் பாதக அம்சங்களை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.
தமிழக மக்களை இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்துமறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து தமிழகத்தின் உரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார். கர்நாடகத்திற்குசாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையிலும் கூட, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றன. இது கண்டனத்துக்குரியது.
1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது, இதேபோல தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது. பல நூறு பேர்கொல்லப்பட்டனர். அதே நிலை இப்போதும் வந்து விடக் கூடாது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications