கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா
விசாகப்பட்டனம்:இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டனத்தில் நடந்த 4வது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்தபோட்டியில் இலங்கை வென்றது. 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டனத்தில் 4வது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் போட்டியை ரசிகர்கள் விறுவிறுப்பாக எதிர்பார்த்தனர்.
மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மழையால் 47 ஓவர்களாகக் கொண்டபோட்டியாக இது நடந்தது. முதலில் இலங்கை அணி பேட் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல்இலங்கை வீரர்கள் ரன் எடுக்கத் திணறினர்.
ஜெயசூர்யா (22), அட்டப்பட்டு (19), கேப்டன் மஹளா ஜெயவர்த்தனே (7), சங்கக்காரா (1) ஆகிய முன்னணிவீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ஆனால் மறு முனையில் புதுமுக வீரர் சமர சில்வா படு அபாரமாக ஆடிசதம்அடித்தார். 107 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
இறுதியில் 47 ஓவர்களில் இலங்கை அணி 259 ரன்களை சேர்த்தது. பின்னர் இந்திய அணி தனது பேட்டிங்கைத்தொடங்கியது.
கங்குலியும், ஷேவாக்கும் பட்டாசு போல பொரிந்து ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஷேவாக் சிறப்பாக ஆடி46 ரன்களை சேர்த்திருந்த நிலையில், ரன் அவுட் ஆனார்.
ராபின் உத்தப்பாவும் தன் பங்குக்கு அபாரமாக ஆடி 52 ரன்களைக் குவித்தார். ஆனால் இவர்களை விடகங்குலியும், யுவராஜ் சிங்கும்தான் இந்திய ரசிகர்களுக்கு ரன்களைக் குவித்து விருந்தளித்தனர்.
கங்குலி ஆட்டமிழக்காமல் 58 ரன்களைக் குவித்தார். இதேபோல, யுவராஜ் சிங் படு சிறப்பாக ஆடி ரன்களைக்குவித்தார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அவர் விளையாடியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இறுதியில், 41 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 263 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.
ஆட்ட நாயகனாக சதம் அடித்த இலங்கை வீரர் சமர சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக கங்குலிஅறிவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications