இலங்கை வீரர்கள் தாக்கி தமிழக மீனவர் காயம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, மீனவர்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர்.
கோட்டைப்பட்டனத்திலிருந்து 16ம் தேதி ஆரோக்கியசாமி, மருத்தி, ராசப்பன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.இவர்கள் அய்யன்பட்டி என்ற மீனவ கிராமத்த்ை சேர்ந்தவர்கள்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் மீனவர்களின் ஒரு படகு உடைந்தது. இதையடுத்து நான்கு மீனவர்களும் தாங்கள் வந்த இன்னொரு படகில் ஏறித் தப்பினர். ஆனால் படகில்இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வெறியர்கள் சரமாரியாக தாக்கி அடித்துள்ளனர்.
மேலும் தமிழர்களைப் பற்றியும், தமிழக்ததைப் பற்றியும் இழித்தும், தரக்குறைவாகவும் பேசி திட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ராசப்பன்படுகாயம் அடைந்தார்.
சிங்கள வெறிப்படையிடம் சிக்கி தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் பின்னர் அவர்களிடமிருந்து மீண்டு கரைக்குத் திரும்பினர்.
படுகாயத்துடன் மீனவர்கள் திரும்பியதைப் பார்த்த அய்யன்பட்டி கிராமம் பதட்டமடைந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார்கொடுத்துள்ளனர். காயமடைந்த ராயப்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications