வைகோ ஜாமீன்-ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
சென்னை:பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் வைகோவின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என சென்னைஉயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியது தொடர்பாக வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுஒராண்டுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தனர்.
573 நாட்களுக்குப் பிறகு வைகோ ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கடந்த 2005ம் ஆண்டு அதிமுக அரசுசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. இத்தனை காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த மனு, நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன்,பாலசுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞ>டம் இதுகுறித்து ஆட்சேபனை உள்ளதா என்று நீதிபதிகள் கேட்டபோது, அரசு வக்கீல் ஆட்சேபனைதெரிவிக்கவில்லை.
இதையடுத்து வைகோ ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதற்கிடையே, வெளியூர் செல்வதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications