அவதூறு வழக்கு: விஜயகாந்த்துக்கு விலக்கு
சென்னை:திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில், நேரில் ஆஜராவதிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துப் மாலைமுரசு நாளிதழுக்கு பேட்டிகொடுத்திருந்தார் விஜயகாந்த்.
இதையடுத்து முதல்வருக்கும், திமுகவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விஜயகாந்த் பேசியதாக கூறி அவர் மீதும் மாலைமுரசுநாளிதழ் மீதும் ஆற்காடு வீராசாமி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என விஜயகாந்த்துக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் விஜயகாந்த் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர அடிப்படை முகாந்திரம் கிடையாது. எனவேவழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என். பாட்சா, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்த்துக்கு விலக்கு அளித்தார். இருப்பினும்,நீதிமன்றம் கேட்டுக் கொண்டால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை தொடர அடிப்படை முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றம் கருதுகிறது. இதுதொடர்பான கருத்தை சம்பந்தப்பட்டவிசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications