சென்னை: 59 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிதேமுதிக-5, பாஜக-2, சிபிஎம்-1
சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நடந்த மறு தேர்தலில் திமுக கூட்டணி 59 வார்டுகளைப்பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு 5 வார்டுகள் கிடைத்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 33 வார்டுகளுக்கு திமுககூட்டணி கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீதம் உள்ள 67 வார்டுகளுக்கு 18ம் தேதி மறு தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிநேற்று காலை தொடங்கி, நள்ளிரவு வரை நீடித்தது. அனைத்து முடிவுகளும் நள்ளிரவில் வெளியாயின.
இதில் திமுக கூட்டணி 59 வார்டுகளில் வென்றுள்ளது. இதில் திமுகவுக்கு 32 இடங்களும், காங்கிரசுக்கு 16இடங்களும், பாமகவுக்கு 9 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களும் கிடைத்தன.
பிரதான கட்சிகளான அதிமுக, மதிமுக போட்டியிடாததால் பலனடைந்த தேமுதிகவுக்கு 5 இடங்களில் வெற்றிகிடைத்தது. அதேபோல பாஜகவுக்கும் 2 வார்டுகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் ஒரு இடமும்கிடைக்காமல் போன மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை ஒரு வார்டு கிடைத்துள்ளது.
3 இடங்களில் தேமுதிகவிடம் திமுக தோல்வி:
27, 35 மற்றும் 63 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்களை தேமுதிக வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.
அதேபோல 45வது வார்டில் பாமகவையும், 48வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளரையும் தேமுதிகதோற்கடித்துள்ளது.
பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இரு வார்டுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளனர்.
59வது வார்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகியை, திமுக வேட்பாளர் சேகரை வீழ்த்திவென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications