மதிமுக லோக்சபா கொறடாவை நீக்கிய எல்.ஜி!
டெல்லி:மதிமுக நாடாளுமன்றக் கட்சியின் கொறடா பொள்ளாச்சி கிருஷ்ணனை நீக்கி விட்டதாக எல்.ஜி. தலைமையிலன போட்டி மதிமுக அறிவித்துள்ளது.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் போட்டி மதிமுகவை நடத்தி வருகின்றனர். போட்டி பொதுக்குழுவைக் கூட்டிவைகோவை பதவியிலிருநது நீக்கினர். செஞ்சி ராமச்சந்திரன் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாங்களே உண்மையான மதிமுக என்றும் அறிவித்தனர். பின்னர் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து தாங்களே உண்மையானமதிமுக என்று கூறி பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று துணை தேர்தல் அதிகாரிபட்டாசார்யாவையும் சந்தித்து நாங்கள் தான் உண்மையான மதிமுக என்று மனு கொடுத்தனர். மேலும் நாடாளுமன்ற மதிமுக கொறடா பொள்ளாச்சிகிருஷ்ணனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தலைமையிலான மதிமுக சார்பாக கொறாடாவாக தேர்ந்துஎடுக்கப்பட்ட என்னை நீக்க எல்.ஜி. அணிக்கு அதிகாரம் இல்லை. மேலும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி,நாடாளுமன்றம் நடைபெறும் போது புதன்கிழமை தோறும் நடைபெறும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி கொறாடக்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்றார்.
மதிமுகவை உடைக்க முயலும் எல்.ஜி. அணியினர் கிருஷ்ணனுக்கு பெருமளவில் பணம் கொடுத்து இழுகக முயன்றதாக வைகோவும், கிருஷ்ணனும்ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கே, காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அங்கீகாரம் அளித்துள்ளதாகதெரிகிறது. இது திமுகவை வெறுப்பில் தள்ளியுள்ளது.












Click it and Unblock the Notifications