விசா முடிந்தும் தங்கிய இலங்கை வாலிபர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை திருவல்லிக்கேணியில் விசா காலம் முடிவடைந்த பின்னரும், நாடு திரும்பாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருவல்லிக்கேணியில் உள்ள ஒருலாட்ஜில் போலீசார் சோதனை நடத்திய போது இலங்கையை சேர்ந்த யோகமூர்த்தி என்பவர் தனது விசா காலம் முடிந்து சென்னையில் தங்கியிருந்ததுதெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதில் தெரிவித்தார். சந்தேகப்பட்ட போலீசார் அவரை கைது செய்தனர். இவரைலாட்ஜில் தங்கியிருக்க அனுமதித்த லாட்ஜ் மேனேஜர்களான அப்துல் கரீம் (29), தமீம் (39) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications