ஆம்னி பஸ்கள்-வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலனை முன்னிட்டு தனியார் பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 900 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவற்றில், 150பேருந்துகள் மட்டுமே கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனால் அரசு விரைவுப் பேருந்துகளில் இடம்கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதனால் பயணிகளின் நலனை முன்னிட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி, தனியார் சொகுசு பேருந்து உரிமையாளர்களிடம்பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 400 சொகுசு பேருந்துகள் தனியாரிடமிருந்து பெறப்படவுள்ளன.

இப் பேருந்துகளிலும் அரசு பேருந்து கட்டணமே வசூலிக்கப்படும். இதன் மூலம் தனியார் ஆம்னி பேருந்துகளால் ஏற்பட்டுள்ள போட்டியைஓரளவுக்கு சமாளிக்க முடியும் என அரசு கருதுகிறது.

இந்த காண்டிராக்ட் சொகுசு பேருந்தின் நடத்துநர் மட்டும் அரசு சார்பில் நியமிக்கப்படுவார். டிரைவரை தனியார் நிறுவனமே நியமிக்கும். நடத்துநர்பயணக் கட்டணத்தை தனக்குரிய டிப்போவில் ஒப்படைப்பார்.

மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இந்த திட்டம் தமிழகத்திலும் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+