பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை:சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கன்னட பிரசாத் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க போலீஸ்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படுகிறது.
விபச்சாரப் புரோக்கர் கன்னட பிரசாத் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு இன்று காலை நீதிபதிபெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கன்னட பிரசாத்மீதான 18 வழக்குகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.
எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவேஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரசாத்தை காவலில் விட அனுமதிக்குமாறு கோரி போலீஸ் தர ப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு மீதும் இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications