சென்னையில் நடமாடும் விபச்சாரிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:செல்போன் சகிதம் வாகனங்களில் சென்றபடி விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை சென்னை போலீஸார் கைது செய்தனர். இருபுரோக்கர்களையும் போலீஸார் கைது செய்தனர். ஒரு மாமா தப்பி ஓடி விட்டார்.

சென்னை போரூர் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்தி நகர் 1வது தெருவில் ஒரு மாருதி கார்நின்றிருந்தது. அந்தக் காருக்கு அருகே இரண்டு பேர் செல்போனில் ரொம்ப பிசியாக பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை நெருங்கினர். இதைப் பார்த்த ஒருவர் திடீரென தப்பி ஓடினார். இதையடுத்து வேகமாககாரை நெருங்கிய போலீஸார் காரை சுற்றி வளைத்தனர்.

கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது, 2 பெண்களும், இரண்டு ஆண்களும் இருப்பது தெரிய வந்தது. அவர்களை கீழே இறக்கி விசாரித்தபோது,அவர்கள் விபச்சாரக் கும்பல் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்ற போலீஸார் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அந்த ஆண்களின் பெயர்சரவணன், ராஜு என்பது தெரிய வந்தது. இருவரும் புரோக்கர்கள் ஆவர். தப்பி ஓடிய நபரின் பெயர் மோகன் ரெட்டி. இவர் ஆந்திராவைச்சேர்ந்தவர். சென்னையில் வந்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். விபச்சார வழக்கில் பலமுறை கைதாகி வெளியில் வந்து மீண்டும் மீண்டும்இதே தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காரில் இருந்த இரு பெண்களில் மோனிகா என்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் பெங்களூரைச் சேர்ந்த தானியா. இருவரையும்சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் மோகன் ரெட்டிக்கு வலை விரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+