ராமர் பாலத்தைக் காக்க பாஜக யாத்திரை
மதுரை:ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்கக் கோரி 3 பாதயாத்திரை மற்றும் ஒரு ரத யாத்திரையைமேற்கொள்ள தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.
மதுரையில் பாஜக தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் ராமர்பாலம் என அழைக்கப்படும் ஆதாம் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
ராமர் பாலத்தை சேதப்படுத்தாத வகையில் இந்தத் திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி 3 பாதயாத்திரைமற்றும் ஒரு ரத யாத்திரையை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
விளாத்திகுளத்திலிருந்து ஒரு பாத யாத்திரையும், தேவகோட்டையில் இருந்து 2வது பாதயாத்திரையும், மதுரையிலிருந்து 3வது யாத்திரையும்கிளம்பி ராமநாதபுரத்தில் 3 பாதயாத்திரைகளும் முடிவடையும்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரை பிரமாண்டமான ரதயாத்திரை நடைபெறும். இந்த யாத்திரைகளுக்கான தேதிகள் மார்ச் 11ம் தேதிநடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
தமிழகத்தின் தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரை போடப்பட்ட புராண காலத்து பாலம்தான் ராமர் பாலம். இந்தப் பாலம்இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். கற்களால் அமைக்கப்பட்ட புராதண பாலம் இது. இதுகுறித்து மேலும் ஆய்வுகள்செய்யப்பட வேண்டிய நிலையில் இந்தப் பாலத்தை இடிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது, வருத்தத்திற்குரியது.
கர்நாடக முதல்வர் குமாரசாமி 2 நாட்கள் தமிழகத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். மிகவும் அமைதியாக, எந்தவிதப் பிரச்சினையும்இல்லாமல் அவரது பயணம் அமைந்துள்ளது. ஆனால் கர்நாடகத்தில் இதற்கு நேர் மாறான நிலை நிலவுகிறது.
தமிழ்ப் பட படப்பிடிப்புகளை அங்கு நடத்த முடியவில்லை, தமிழ்த் திரைப்படங்களை திரையிட முடியவில்லை, தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்டவாகனங்களை அங்கு ஓட்ட முடியவில்லை. தமிழகப் பயணத்தின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இதே நிலை கர்நாடகத்திலும் ஏற்படகுமாரசாமி முயற்சிக்க வேண்டும்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான்அதுகுறித்து விவாதிக்கப்படும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications