பஸ் எரிப்பு வழக்கு: 26 குற்றவாளிகள் அப்பீல்
சென்னை:தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முனியப்பன் உள்பட 26 குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டதண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
தர்மபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை வழிமறித்து அதிமுகவினர் பேருந்துக்கு தீவைத்ததில், அதில்இருந்த கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு கருகி இறந்தனர்.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில்நடந்தது. பின்னர் இது சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
சேலம் நீதிமன்றத்தில், கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன், நெடு என்கிற நெடுஞ்செழியன்ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மற்ற 26 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. விசாரணைக் காலத்திலேயேசெல்லக்குட்டி என்பவர் இறந்து விட்டார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். இந்த நிலையில் 3 பேருக்கு விதிக்கப்பட்டதண்டனையை உறுதி செய்யக் கோரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி முனியப்பன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்துள்ளார். மற்ற இருவரும் இன்னும் மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
தற்போது 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரும் தங்களது தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
சேலம் நீதிமன்றத்தில் விசாரணை முறையாக நடக்கவில்லை. எனவே எங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரைதண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைவரும் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications