விமான பயணியிடம் சிக்கிய 8 கிலோ தங்கம்
சென்னை:மும்பையிலிருந்து சென்னை வந்த விமான பயணியிடம் கணக்கில் வராத 8 கிலோ தங்க நகைகள் சிக்கின.
மும்பையிலிருந்து கிரண்குமார் என்பவர் சென்னை வந்தார். அவர் பெருமளவு தங்க நகைகளை கொண்டு வருவதாக வருமான வரித்துறையினருக்குதகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை வந்த கிரண்குமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் மடக்கி சோதனை போட்டனர். அப்போது அவரிடம் 8 கிலோ தங்கநகைகள் இருந்தது தெரிய வந்தது.
கிரண்குமார் மும்பையில் உள்ள மிகப் பெரிய நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் கொண்டு வந்த நகைகளுக்கு உரிய கணக்குஇல்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள சில நகைக் கடைகளுக்கு இந்த தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர் அதிகாரிகளிடம்தெரிவித்தார்.
இருப்பினும் அவர் கொண்டு வந்த நகைகளுக்கு உரிய கணக்கு இல்லாததால் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துமேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications