கோவை, திருப்பூரில் 5 புலி ஆதரவாளர்கள் கைது
கோவை:சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இரும்புக் குண்டுகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் கோவை மற்றும் திருப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், கண்ணிவெடிகள் தயாரிக்கப் பயன்படும் இரும்புக் குண்டுகள் ஆகியவற்றைகடத்துவது அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக 40க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் 16 பேர் விடுதலைப் புலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புலிகளுக்கு இரும்புக் குண்டுகள் கடத்தப்படுவதையொட்டி தமிழகத்தில் உள்ள அலுமினியப் பட்டறைகளையும், அகதிகள்முகாம்களையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அலுமினியப் பட்டறைகளும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. இந்தப் பின்னணியில், திருப்பூர்அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை செளரிப்பாளையம், ராஜீவ் காந்தி நகருக்கு விரைந்த போலீஸார் அங்கு 4 பேரை கைதுசெய்தனர். இவர்களுக்கு தங்க இடம் கொடுத்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவரும் போலீஸ் பிடியில் சிக்கினார்.
ஐந்து பேரும் உடனடியாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஆனால்அவர்களில் இருவர் ராமநாதபுரம், ஒருவர் பெரம்பலூர் மாவட்டம் எனத் தெரிகிறது. இன்னொரு நபர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் எனக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications