துபாய்-விமான நிலைய விபத்தில் 14 பேர் காயம்
துபாய்:துபாய் விமான நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த விமானம் கிளம்பும்போது விபத்தில் சிக்கியது. இதில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த பிமன் பங்களாதேஷ் விமானம் 236 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் துபாயிலிருந்து டாக்கா கிளம்பத் தயாராகஇருந்தது.
விமானம் புறப்பட்டபோது அது விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த 14 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாகவிமானம் நிறுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
என்ன மாதிரியான விபத்து, என்ன காரணத்தால் ஏற்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம்எட்டு மணி நேரத்திற்கு மூடப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானங்கள் வந்து செல்ல ரன்வே பொருத்தமானதாக உள்ளதா என்பதை சோதித்த பின்னரே விமான நிலையம் திறக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications